நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக அவதியுறும் கூராய் கிராம அலுவலர் பிரிவில் சீதுவிநாயகர்குள கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம்
தொடர்ச்சியாக நிலவிவரும் கடும் வரட்சி காரணத்தால் மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கூராய் கிராம அலுவலர் பிரிவில் சீதுவிநாயகர்குள கிராம மக்களுக்கு மாந்தை மேற்கு பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ அலகின் ஏற்பாட்டில் 10.07.2019 அன்று குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

















