வடக்கு மாகாண பண்பாட்டு அலுவலகர்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் எமது பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய ஆடிப்பிறப்பு நிகழ்வு 2020 , 16.07.2020 இன்று பிரதேச செயலாளா் செ.கேதீஸ்வரன் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. திருகேதீச்சர ஆலய பிரதமகுரு மதிப்பிற்குரிய சிவசிறி கருணானந்த குருக்கள், அடம்பன் தேவாலய அருட்தந்தை வணக்கத்திற்குரிய நவரத்தினம் அடிகளாா், சொா்ணபுரி பள்ளிவாசல் மௌலவி முனைவர் ஆகிய மும்மததலைவர்களும் இதில் பங்குபற்றி இருந்ததோடு கொழுக்கட்டையும் ஆடிக்கூழும் பாிமாறி இன்றைய நிகழ்வு இனிதே சிறப்புற நிறைவு பெற்றது.

















