எமது பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் 2019 ம் ஆண்டிற்கான சிறுவர் தின நிகழ்வுகள் வெகு சிறப்பாக 13.10.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மன்/ஈச்சளவக்கை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கொண்டாடப்பட்டது.
மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.எஸ்.கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.எஸ்.லோகேஸ்வரன் பிரதிக்கல்வி பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) மடு வலயம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக உதவிக்கல்வி பணிப்பாளர் (முன்பள்ளி) மடு வலயம் அவர்களும், அடம்பன் பொலிஸ் நிலைய உத்தியோகத்தரும், இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய உத்தியோகத்தரும், கலந்துகொண்டனர். மேலும் கௌரவ விருந்தினர்களாக அருட்தந்தை அருட்குமரன் அடிகளாரும், மௌலவி N.M.M.ரிஸ்வான் அவர்களும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் அயல் கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த பல சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இதன்போது பல கலை நிகழ்வுகளும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு, கலந்துகொண்ட சிறுவர்கள் அனைவரும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






















